Published : 17 Mar 2019 08:39 PM
Last Updated : 17 Mar 2019 08:39 PM

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கோவா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் காலமானார். கணையப் புற்றுநோயால் அவதிப்பட்ட  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மதியம் அறிவிக்கப்பட்டது, இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63.

 

கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார் ஆனால் அவர் தொடர்ந்து  தன் இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கோவா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மாதம் 5ம் தேதி கோவா திரும்பினார்.

 

பாஜக எம்.எல்.ஏ. பிரான்சிஸ் டி சோஸாவும் இடையில் மரணமடைந்ததால் கோவாவில் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி கோரி வந்தது.

 

இந்நிலையில் தான் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று முதலிலும் பிறகு சில மணி நேரங்கள் சென்ற பிறகு மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகின.

 

மிகவும் தன்னம்பிக்கை மிக்க மனிதரான மனோகர் பாரிக்கர் இந்நிலையில் காலமாகியுள்ளார்.

 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  தன் ட்விட்டரில், மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.  கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழப்பு செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. பொது வாழ்வில் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்,  கோவா மற்றும் இந்தியாவின் மக்களுக்கு அவருடைய சேவை மறக்கமுடியாதது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். 

 

ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x