Published : 20 Mar 2019 09:26 AM
Last Updated : 20 Mar 2019 09:26 AM
ஜார்க்கண்டில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) கடந்த சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசும்போது, “மத்தியில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆட்சி நீடிக்க மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயந்த் சின்ஹா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது ராஞ்சியின் கெல்காவ்ன் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 14 மக்களவை தொகுதிளுக்கான தேர்தல் ஏப்ரல் 29 முதல் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜெயந்த் சின்ஹா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் தொகுதி பாஜக எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT