Published : 16 Mar 2019 09:18 AM
Last Updated : 16 Mar 2019 09:18 AM
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ள லாலு, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மத்திய சிறையில் இருந்துவருகிறார். நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது ராஞ்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லாலு ஒரு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுள் ளார்.
இந்நிலையில் 3 வழக்குகளில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 10-ம் தேதி நிராகரித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லாலுவின் மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT