Published : 05 Mar 2019 12:18 PM
Last Updated : 05 Mar 2019 12:18 PM

குஜராத் பிரச்சாரத்துக்கு நடுவே அரைமணிநேரம் தாயை சந்தித்த பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற பிரதமர் மோடி இடையே தனது தாயை அரை மணிநேரம் சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார். அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு திட்டங்களை அவர் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அகமதாபாத்துக்கு அருகில் உள்ள ரைஸன் கிராமத்தில் பிரதமர் மோடியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் தாய் ஹிராபாவும் வசித்து வருகிறார். பிரச்சாரத்துக்கு நடுவே தனது நேற்று தனது தாயை பார்க்க பிரதமர் மோடி சென்றார்.

அங்கு தாய் மற்றும் உறவினர்களுடன் அரைமணிநேரம் பேசிய பிரதமர் மோடி பின்னர் அருகில் உள்ள சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளில் தாயை சந்தித்து ஆசி பெறுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x