Published : 02 Mar 2019 09:51 AM
Last Updated : 02 Mar 2019 09:51 AM
காகித விமானம் கூட தயாரிக்க முடியாதவர் தொழிலதிபர் அனில் அம்பானி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர மாநிலம் துலேவில் நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காலத்தில் எந்தவொரு நல்ல திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வரவில்லை. மத்திய அரசின் நலத் திட்டத் தொடக்க விழாக்களில் அவர் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டு வருகிறார். 5 நிமிடங்கள் கூட அவரால் மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை கைவிட முடியாது.
சமீபத்தில் டெல்லியில் அமைக்கப்பட்ட போர்த் தியாகிகள் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவர் காங்கிரஸைத் தாக்கித்தான் பேசினார். இதுதான் அவருக்கும், எங்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் மக்களை நினைக்கிறோம். அவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதைப் பற்றியே நினைக்கிறார்கள்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அதை மறைக்கப் பார்க்கிறது பாஜக தலைமையிலான அரசு. காகித விமானம் கூட உருவாக்க முடியாதவர் தொழிலதிபர் அனில் அம்பானி. அவரது நிறுவனத்துக்கு ரூ30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை மத்திய அரசு கொடுத்தது.
இதன்மூலம் தொழிலதிபர்களுக்கு சாதகமாக பிரதமர் மோடி நடந்துகொள்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT