Published : 16 Mar 2019 09:21 PM
Last Updated : 16 Mar 2019 09:21 PM

நியூஸிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் பலி

கிறிஸ்ட் சர்ச் மசூதி தீவிரவாத துப்பாக்கிச் சூட்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவரும் பலியாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த தாக்குதலில் ஹைதரபாத்தைச் சேர்ந்த பர்ஹஜ் அக்சன் (வயது 31) என்ற இந்திய இளைஞர் காணாமல் போனதாக தகவல் வெளியாகின. அங்கு ஐடி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த அவர் சம்பவம் நடந்தநேரத்தில் அங்கு இருந்துள்ளார். அதன் பிறகு அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளதை நியூசிலாந்து போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பர்ஹஜின் சகோதரரர் காஸிப் கூறுகையில் ‘‘நியூசிலாந்தில் நடந்த தாக்குதலில் எனது சகோதரர் உயிரிந்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x