Published : 02 Mar 2019 08:24 AM
Last Updated : 02 Mar 2019 08:24 AM

தீவிரவாதிகளுடன் சண்டை: 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ளகிரால்குந்த் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிஆர்பிஎப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், நேற்று இரவு அப்பகுதியை சுமார் 50-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர், சிஆர்பிஎப் படையினர், போலீஸார் ஆகியோரை கொண்ட பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்புப் படையினர் தங்களை நெருங்குவதை அறிந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் இருந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, அந்தக் கட்டிடத்துக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்துள்ளனர். அப்போது, அங்கு இறந்து கிடந்தது போல் இருந்த தீவிரவாதி திடீரென எழுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளான். பின்னர், அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அனைவரும் ஒருசேர பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில், பாதுகாப்புப் படை தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 8 வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2 தீவிரவாதிகள் பலி

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அங்கு தீவிரவாதிகளுடன் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x