Published : 02 Mar 2019 04:40 PM
Last Updated : 02 Mar 2019 04:40 PM
ஹைதராபாத்தில் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்த தேர்வுக் கூடத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டடதால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
ப்ளஸ் டூ தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதால் குரு ராஜா என்ற மாணவன் இன்று உயிரிழந்தார். ஹைதராபாத் அருகே உள்ள செகந்திராபாத் ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் ப்ளஸ் டூ தேர்வு மையத்தில் இச்சம்பவம் நடந்தது.
அவரது உயிர் பிரியும் முன்பு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இவர், ஹைதராபாத், எல்லாரெட்டிகுடாவில் அமைந்துள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் பயிலும் மாணவர். தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 9.83 லட்சம் மாணவர்கள் இண்டர்மீடியேட் (11, 12 வகுப்புகள்) தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT