Published : 18 Mar 2019 09:04 AM
Last Updated : 18 Mar 2019 09:04 AM
ஒடிசா மாநிலம் கட்டாக்கின் சலேபூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரகாஷ் சந்திர பெஹெரா. காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த இவர், கடந்த சனிக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினார். நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னி லையில் பாஜகவில் பிரகாஷ் சந்திர பெஹெரா சேர்ந்தார்.
பெஹெரா கூறுகையில், ‘‘20 வருடங்களாக காங்கிரஸில் பணியாற்றி வந்தேன். அக்கட்சி என்னைப் புறக்கணித்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான நம் விமானப் படையின் தாக்குதலுக்குப் பிறகு எனது தொகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இளைஞர்களிடம் ஆதரவு பெருகி உள்ளது. பிரதமர் மோடியின் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவேதான், பாஜக வில் சேர்ந்தேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT