Published : 10 Mar 2019 05:42 PM
Last Updated : 10 Mar 2019 05:42 PM

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு: ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது: வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

நடப்பு மக்களவையில் பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதி முடிகிறது என்பதால், அதற்குள் நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரமாகி வருகிறது.

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாள்தோறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

இதனால், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் தங்களின் வேட்பாளர்களை படிப்படியாக அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக ஊடகங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட்டனர். அவர்கள் தெரிவித்ததாவது:

முதல்கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 11ம் தேதி - 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது

2-ம் கட்ட வாக்குபதிவு:  ஏப்ரல் 18-ம் தேதி - 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது

3ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 23-ம் தேதி  14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

4-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 29-ம் தேதி  9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

5-ம் கட்ட வாக்குப்பதிவு:  மே 6-ம் தேதி  7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு

6-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 12-ம் தேதி  7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

7-ம் கட்ட வாக்குப்பதிவு: மே 19-ம் தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு

இறுதியாக வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மே 23-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x