Published : 19 Mar 2019 07:02 PM
Last Updated : 19 Mar 2019 07:02 PM
பிரதமர் மோடி தான் எங்கு எப்போது எதைப்பற்றி பேசினாலும், உரையாற்றினாலும் 70 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்கவில்லை என்று முந்தைய காங்கிரஸ் உள்ளிட்ட மத்திய ஆட்சியினைத் தாக்கிப் பேசுவது வழக்கம்.
பிரதமர் மோடி குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சி இல்லை ஊழல்தான் மலிந்திருக்கிறது, கடந்த 70 ஆண்டுகளாக செய்ய முடியாததை நாங்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் சாதித்துள்ளோம், என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் இத்தனையாண்டுகால ஆட்சியைக் குறிவைத்தே விமர்சிப்பது வழக்கம்.
இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வந்தது, பாஜக தொண்டர்களும் மோடியின் இந்தத் தாக்குதலையே ஆயுதமாக ஆங்காங்கே பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்று அரசியலுக்கு வந்துள்ள பிரியங்கா வதேரா மோடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.
“தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. 70 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்கவில்லை, வளர்ச்சியில்லை என்ற பிதற்றலுக்கும் காலாவதி தேதியுண்டு.
நீங்கள்தான் (பாஜக) இந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள், என்ன செய்து விட்டீர்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT