மங்கள்யான் விண்கலம் இன்னும் 23 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும்: இஸ்ரோ

மங்கள்யான் விண்கலம் இன்னும் 23 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும்: இஸ்ரோ
Updated on
1 min read

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் 300-வது நாள் பயணத்தை நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த தகவல் இஸ்ரோவின் சமூக வலைதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளது. இன்னும் 23 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கல்யான் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மங்கள்யான்' விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 23 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மங்கள்யான் விண்கலத்தின் மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in