Published : 11 Feb 2019 05:09 PM
Last Updated : 11 Feb 2019 05:09 PM
உத்தரப் பிரதேச கிராமங்களில் 2 நாட்களில் மட்டும் கோசாலைகளில் பராமரிக்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அங்குள்ள கிராமங்களில் கோசாலைகள் ஏற்படுத்தப்பட்டு அங்கு ஏராளமான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முசாபர்நகர் மாவட்டத்தில்கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மேய்ச்சலுக்குச் சென்ற 100க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பசுக்கள் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் விஷம் தோய்ந்த புற்களை கடித்து உண்டோ அல்லது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் ஏதாவது விஷம் கலந்திருந்த தண்ணீர் ஏதாவது அருந்தியதாலோ உயிரிழந்திருக்கக் கூடுமென அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவும் அவர்களுடன் கால்நடை மருத்துவர்களும் சம்பவம் நடந்த பகுதிகளுக்குச் சென்று பசுக்கள் உயிரிழந்த காரணத்தை அறிய விசாரணையை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT