Published : 01 Feb 2019 12:17 PM
Last Updated : 01 Feb 2019 12:17 PM
பெங்களூருவில் இந்திய விமானப் படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பலியானார். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பெங்களூருவின் ஏமலூர் பகுதியில் உள்ள எச்ஏஎல் விமான நிலையத்தில் இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் மேலெழும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுச்சுவர் மீது விமானம் மோதியதில், தீப்பிடித்தது. இதைத் தொடர்ந்து மீட்புப்பணிக்காக ஹெலிகாப்டர்களும் தீயணைப்பு இயந்திரங்களும் விரைந்து வந்தன.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகள் இருவரும் வெளியே குதித்ததாக எச்ஏஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது..
எனினும் விமானியில் ஒருவர் பலியானதாக எச்ஏஎல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மற்றோரு விமானியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT