Published : 22 Feb 2019 07:05 PM
Last Updated : 22 Feb 2019 07:05 PM

அசாமில் கள்ளச்சாராயம் குடித்த 9 பெண்கள் உட்பட 17 பேர் பலி

அசாமின் கோலாஹட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 9 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோலாஹட்டின் சல்மாரா டீ தோட்டத்தில் வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய கோலாஹட் எஸ்பி புஷ்ராஜ் சிங், ''டீ தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைசெய்துகொண்டு, அங்கேயே வசிக்கின்றனர். தொழிலாளர்களில் ஒருவரான திரௌபதி ஒரான் என்னும் 65 வயது பெண்மணி தனது மகன் சஞ்சு ஒரானுடன் (30) அமர்ந்து தனது வீட்டில் மது அருந்தியுள்ளார்.

அவர்களுடன் சக தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவில் 4 பெண்கள் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்றே நால்வரும் உயிரிழந்தனர். இன்று அதிகாலை ஏராளமானோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வரை 9 பெண்கள் உட்பட 17 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளனர்.

தாயும் மகனும் இறந்துவிட்டதால் எங்கிருந்து கள்ளச்சாராயம் வாங்கப்பட்டது என்று உடனடியாகத் தெரியவில்லை. உரிய விசாரணைக்குப் பிறகு சாராயம் எப்படி விஷமாக மாறியது என்று தெரியவரும்.

தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் டீ தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வேறெங்காவது இருந்துதான் சாராயத்தை வாங்கியிருக்க வேண்டும். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x