Last Updated : 08 Feb, 2019 02:13 PM

 

Published : 08 Feb 2019 02:13 PM
Last Updated : 08 Feb 2019 02:13 PM

உத்தரகண்டில் கள்ளச் சாராயம் அருந்தி 12 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

 

 

 

உத்தரகண்டில் தடை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை அருந்தியதால் 12 பேர் பலியாகியுள்ளர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

 

உத்தரகண்டின் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்கி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் உடல்நிலை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

கள்ளச்சாராய விற்பனைக்குத் துணை போன அதிகாரிகள் 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மது உற்பத்தியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை.

 

இதுதொடர்பான விசாரணைக்கு உத்தராகண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x