Last Updated : 27 Feb, 2019 12:08 PM

 

Published : 27 Feb 2019 12:08 PM
Last Updated : 27 Feb 2019 12:08 PM

காஷ்மீரில் இந்திய விமானம் நொறுங்கி விபத்து: இருவர் பலி- பாக். பொறுப்பேற்றது

ஜம்மு காஷ்மீரின் புட்காம் பகுதியில், இந்திய விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்தில் இருந்து 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துப் பேசிய புட்காம் எஸ்எஸ்பி, ''நொறுங்கிய விமானம் இந்திய விமானப் படையின் எம் ஐ- 17 ரக விமானம் எனத் தெரியவந்துள்ளது. விமானப்படை தொழில்நுட்ப அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை செய்ய உள்ளது.இதுவரை இருவரின் உடல்கள் கிடைத்துள்ளன'' என்றார்.

இதனிடையே இந்திய விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். ஆனால் இத்தகவலை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை)  தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

இந்திய அத்துமீறலுக்குத் தகுந்த நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்திருந்தார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x