Last Updated : 03 Feb, 2019 09:08 AM

 

Published : 03 Feb 2019 09:08 AM
Last Updated : 03 Feb 2019 09:08 AM

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்குகிறார்.

இதுகுறித்து கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூரில் கூறியதாவது:

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் பணிகளை பாஜக நிர்வாகிகள் அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி ஹூப்ளியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பிறகு 19, 27 ஆகிய தேதிகளில் மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 14, 21 ஆகிய தேதிகளில் கர்நாடகா வருகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்க உள்ளார். வரும் 26-ம் தேதி ‘எனது வாக்குச்சாவடி வலிமையானது’ என்ற பிரசார திட்டத்தை தொடங்கஇருக்கிறோம். இதில் வாக்குச்சாவடி அளவில் பொறுப்பாளர்களையும், வாக்காளர்களையும் சந்தித்து மோடி அரசின் சாதனைகள் எடுத்துரைக்கப்படும். மார்ச் மாதத்தில் ஒவ்வொரு வட்ட அளவிலும் பாஜக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x