Published : 11 Feb 2019 04:04 PM
Last Updated : 11 Feb 2019 04:04 PM

எங்கள் உயிரையும் கொடுப்போம்: லக்னோவில் பிங்க் டிஷர்ட்டில் உலா வரும் பிரியங்கா சேனாவினர் முழக்கம்

பிரியங்கா காந்திக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம் என்ற கோஷத்துடன் உலா வருகிறது ஒரு குழு. அந்தக் குழு தங்களை பிரியங்கா சேனா என அழைக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் லக்னோவில் பேரணியைத் துவக்கியுள்ளார் பிரியங்கா வத்ரா.  அவரை வரவேற்கக் கட்சித் தொண்டர்கள் பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஒரு குழுவினர் தங்களை பிரியங்கா சேனா என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இப்போதைக்கு 500 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் பிங்க் நிற டிஷர்ட் அணிந்திருக்கின்றனர். இது குறித்து குழுவினர் ஒருவர் கூறும்போது, "பிரியங்கா சேனா இப்போது உருவான புதுப்படை அல்ல.

நாங்கள் ஏற்கெனவே உள்ள குழுவினர்தான். ஆனால், இந்த சீருடைதான் புதியது. நாங்கள் ஒரு ஒழுங்குமிகுந்த குழு என்பதை பிரியங்காவிடம் நிரூபிக்கவே இப்போது ஒரே நிற ஆடை அணிகிறோம். பிரியங்கா காந்தி இந்தியப் பெண்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும்" என்றார்.

அவர்கள் டிஷர்ட்டில், "இந்த தேசத்துக்கு மரியாதை செலுத்தும்விதமாக பிரியங்காவுடன் களத்தில் நிற்கிறோம். அவருக்கு எங்கள் மரியாதையை செலுத்துகிறோம். தேவைப்பட்டால் உயிரையும் கொடுப்போம்" என எழுதப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x