Published : 23 Feb 2019 03:21 PM
Last Updated : 23 Feb 2019 03:21 PM
சிறப்பு அந்தஸ்து வழங்காமல் பிரதமர் மோடி ஆந்திராவுக்குள் நுழைய உரிமை இல்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளிடம் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது
‘‘தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்டபோது, சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார். ஆனால் அதனை ஏற்று அவர் எந்த நிதியும் வழங்கவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆந்திராவுக்குள் நுழைய அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி அதனை செய்யாததற்கு குறுகிய அரசியல் நோக்கமே காரணம்.
திருப்பதி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்தியில் ஆட்சியமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆந்திராவுக்கு நல்லது செய்யும் கட்சிக்கே நாங்கள் வாக்களிப்போம்.
சந்திரசேகர் ராவை போலவே, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், பிரதமர் மோடிக்கு தான் ஆதரவு அளிப்பார். ஆந்திராவை வளரவிடாமல் தடுப்பதே இருவரின் நோக்கம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஆந்திராவின் குரலுக்கு ஒட்டுமொத்த தேசமும் இன்று ஆதரவு அளித்துள்ளது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT