Published : 22 Feb 2019 10:18 AM
Last Updated : 22 Feb 2019 10:18 AM

40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கவில்லை: மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர். இதனால் அவர்களுடைய குடும்பத்தினர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். வீர மரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுக்கிறது. ஆனால், நாட்டுக்காக ஒன்றுமே செய்யாத அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அரசு பரிசாக வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர் இனி சந்தோஷமாக வாழ்வார். பிரதமர் மோடியின் ‘புதிய இந்தியா’வை வரவேற் கிறேன்.

இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இந்தப் பதிவுடன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்காம்) தலை வரான அனில் அம்பானி, நீதி மன்ற அவமதிப்பு செய்ததாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடங்கிய ஊடக செய்தி இணைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தஸ்ஸோ நிறு வனத்திடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அனில் அம்பானி குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அனில் அம்பானிக்கு வழங்கி இருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதில் ரூ.30 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் குறை கூறி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசும் அனில் அம்பானியும் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x