Last Updated : 10 Feb, 2019 08:27 AM

 

Published : 10 Feb 2019 08:27 AM
Last Updated : 10 Feb 2019 08:27 AM

நாடு திரும்பினார் ஜேட்லி

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு அமெரிக்காவில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் பதவி வகித்து வந்த அவர் தனது வழக்கமான அலுவல்களை கவனித்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக மீண்டும் அவர் அமெரிக்கா சென்றார். பொறுப்புகள் இல்லாத மத்திய அமைச்சராக அவர் நீடித்தார். இதனால் அவர் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாமல் போனது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டபோது அங்கு இருந்தபடியே அவ்வப்போது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்து வந்தார். பட்ஜெட் நேரத்தின்போது நியூயார்க்கில் இருந்தபடியே வீடியோ கால் மூலம் நிருபர்களுக்கு அவர் பேட்டியும் அளித்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்த நிலையில் அவர் நேற்று டெல்லி திரும்பினார். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 13-ம் தேதிதொடங்கும் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஜேட்லி பங்கேற்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x