Published : 19 Feb 2019 08:36 PM
Last Updated : 19 Feb 2019 08:36 PM
புல்வாமா கொடூர பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஆதாரங்கள் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இம்ரான் கூறுவது வெறும் நொண்டிச்சாக்கு என்று மத்திய வெளியுறவு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா பதில் நடவடிக்கை எடுத்தால் நாங்களும் திருப்பி அடிப்போம் என்று இம்ரான் கூறியதை அடுத்து இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் இந்தப் பதிலடி கொடுத்துள்ளது.
“பாகிஸ்தான் பிரதமர் இந்தியா ஆதாரங்களை அளித்தால் விசாரணை நடத்துவோம் என்று கூறியுள்ளார். இது ஒரு நொண்டிச்சாக்கு. பாகிஸ்தான் பிரதமர் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. உயிர்த்தியாக வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை” என்று இந்திய வெளியுறவு விவகார அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT