Published : 27 Feb 2019 11:52 AM
Last Updated : 27 Feb 2019 11:52 AM

ராணுவத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் 2016 துல்லியத் தாக்குதல், பாலகோட் தாக்குதல்: ஓர் ஒப்பீடு

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை)  தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

பாலகோட் தாக்குதல் கடந்த 2016-ம் ஆண்டு, யூரி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை நினைவுபடுத்துகிறது.

இன்றைய சூழலில் இரண்டுக்குமான ஓர் ஒப்பீடு:

 

 துல்லியத் தாக்குதல் 2016துல்லியத் தாக்குதல் 2019
காரணம் யூரி தீவிரவாதத் தாக்குதல் புல்வாமா தீவிரவாதத் தாக்குதல்

 

தாக்குதல் முறை

ராணுவ தளத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள்காரில் வெடிகுண்டுகளுடன் தற்கொலைப்படை தீவிரவாதி மோதல்
வீரர்கள் பலி19 ராணுவ வீரர்கள்40 சிஆர்பிஎப் வீரர்கள்
பொறுப்பேற்றவர்கள்விசாரணைக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்று தெரிந்ததுஜெய்ஷ்-இ-முகமது தானாகவேபொறுப்பேற்றது
பதிலடி11 நாட்களில்12 நாட்களில்
இந்திய தாக்குதல்தரை வழித் துல்லியத் தாக்குதல்வான்வழித் துல்லியத் தாக்குதல்
பயன்படுத்தப்பட்ட படைசிறப்பு துணை ராணுவப் படைமிராஜ் 2000 போர் விமானங்கள்
இலக்கு பகுதிபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்பாகிஸ்தான்
பாகிஸ்தானின் எதிர்வினைமுழுமையான மறுப்புஉள்ளே நுழைந்ததை ஒப்புக்கொண்டது; ஆனால் சேதம் ஏற்படவில்லை என்று கூறியது
இந்திய அறிக்கைஎல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் அங்கு இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது

 நம்பகமான உளவுத்துறை தகவலின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது.  இதற்காக ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.  இதற்காக அவர்கள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது முக்கியமானதாக மாறியது.

இதனால் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x