நாட்டின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் குறைப்பு

நாட்டின் அதிவேக ரயில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் குறைப்பு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடியால் பிப்.15ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலான டெல்லி-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அல்லது ட்ரெய்ந்18 கட்டணங்கல் குறைக்கப்பட்டுள்ளன.

சேர் கார் கட்டணம் ரூ.1,850-லிருந்து ரூ.1,760 ஆகவும் எக்சிகியூட்டிவ் வகுப்புக் கட்டணம் ரூ.3,520லிருந்து ரூ.3,310ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ரிட்டர்ன் ஜர்னியில் டிக்கெட் கட்டணம் ரூ.1,700 ஆகவும் எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ.3,260 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சாப்பாடு கட்டணங்களும் மேற்கூறிய குறைக்கப்பட்ட கட்டணங்களில் உள்ளடங்கும்.

இந்தியாவின் அதிவேக ரயில் பிரதமர் நரேந்திர மோடியால் பிப்.15ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in