Published : 23 Feb 2019 05:34 PM
Last Updated : 23 Feb 2019 05:34 PM
கொல்கத்தாவில், கிரிக்கெட் ஸ்டேடியம் கேலரியில் உள்ள இம்ரான் கான் உள்ளிட்ட பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் படங்களை அகற்றும்படி பாஜக இளைஞர் அணி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே 40க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது மேற்குவங்க கிரிக்கெட் அசோஸியேஷன் தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவ்ரவ் கங்குலி, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை அகற்றுவதாக தன் கைப்பட ஒரு கடிதம் எழுதித் தரவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினர் 40 பேர் கைது செய்யப்பட்டதாக ஒரு காவல் உயரதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து மேற்குவங்க கிரிக்கெட் அசோஸியேஷன் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஸ்டேடியம் கேலரியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி, சில தினங்களுக்க முன், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த எதிர்வினை சரியாக போய் சேரவில்லை.
கிட்டத்தட்ட மும்பை கிரிக்கெட் ஸ்டேடியங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் ஈடன் கார்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் எதிரொலித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT