Last Updated : 18 Feb, 2019 07:55 AM

 

Published : 18 Feb 2019 07:55 AM
Last Updated : 18 Feb 2019 07:55 AM

பாகிஸ்தான் மீது ராஜ்நாத் சிங் ஆவேசம்

தீவிரவாதத்தையும், அதன் நடவடிக்கைகளையும் ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் பத்ரக் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ராஜ்நாத் சிங் பேசியதாவது:மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாகவே, தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான தீவிரவாதிகள்அழிக்கப்பட்டனர்.

இதனால் கடந்த 5 ஆண்டுகளாகவே தீவிரவாதிகள் கடும் அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் இருந்து வந்தனர். இதனை உணர்நது கொண்ட பாகிஸ்தான், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக, இந்த புல்வாமா தாக்குதலை நடத்தியிருக்கிறது.

நமது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், மிகப்பெரிய தவறினை பாகிஸ்தான் செய்துவிட்டது. இதற்கு அந்நாடு உரிய விலை கொடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். இதற்காக நமது ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. நமது வீரர்களின் தியாகம் வீண்போகாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x