தேச வளர்ச்சிக்காக திறமைகளை பயன்படுத்துங்கள்: பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

தேச வளர்ச்சிக்காக திறமைகளை பயன்படுத்துங்கள்: பொறியாளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்குமாறு பொறியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று விஞ்ஞானி எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்ததினம். அவரை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 15-ம் தேதி, பொறியாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி: "தங்கள் திறமைகளை முழு வீச்சில் பயன்படுத்தி பொறியியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்க வேண்டும்.

கடின உழைப்பு, ஆராய்ச்சிகள், புத்தாக்கம் மூலம் நமது பொறியாளர்கள் நாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்" என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in