Published : 17 Jan 2019 08:13 AM
Last Updated : 17 Jan 2019 08:13 AM
‘‘பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் தனியார் உட்பட எல்லா கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்’’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதிப்படுத்தி உள்ளார்.
உயர் சாதியில் உள்ள ஏழை களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற் றப்பட்டது. இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள உயர் சாதி ஏழை களுக்கு வரும் 2019 - 20 கல்வி யாண்டு முதல் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். நாட் டில் உள்ள தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்திலும் இந்த இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடுகள் தொடரும். அதற்கு மேல் கூடுதலாக 10 சதவீத இடங்கள்தான் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும்.
நாட்டில் உள்ள 40 ஆயிரம் கல்லூரிகள், 900 பல்கலைக் கழகங்களில் இந்த ஒதுக்கீடுகள் அமல்படுத்தப்படும். இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கும் தனியார் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டியது கட்டாயம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு பாதிக்காத வகையில், 2019 - 20 கல்வியாண்டில் உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கும். கூடுதல் இடங்கள் ஒதுக்குவதன் மூலம் 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதன் படி 25 சதவீத இடங்கள் கூடுதலாக அதிகரிக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ள உயர் சாதி ஏழைகளுக்கு ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத் துக்குள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT