Last Updated : 25 Jan, 2019 09:26 PM

 

Published : 25 Jan 2019 09:26 PM
Last Updated : 25 Jan 2019 09:26 PM

பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி கடந்த முறை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பலமுறை மத்திய அமைச்சராக இருந்தவர்.

பாரத ரத்னா விருதுக்கான மற்ற இருவரும் தம் மறைவிற்கு பின் அதைப் பெற உள்ளனர். இதில் ஒருவரான நானாஜி தேஷ்முக் ஒரு சிறந்த சமூக சேகவர்.

பாஜகவின் பழைய அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கின் தலைவரான நானாஜி தேஷ்முக், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் இவர் கடந்த பிப்ரவரி 27, 2010-ல் மறைந்தார்.

மூன்றாவது விருது அசாமை சேர்ந்த பூபன் ஹசாரிகாவிற்கு வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் 5, 2011-ல் மறைந்த ஹசாரிகா புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார்.

பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாரத ரத்னா விருது பெறும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி உள்ளார். நானாஜி தேஷ்முக் மற்றும் பூபன் ஹசாரிகா ஆகியோரின் பங்களிப்பையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

பிரணாப்பை பாராட்டிய பிரதமர் மோடி, ‘நம் காலத்திய சிறந்த அரசியல் மேதையாக திகழ்ந்தவர். நாட்டின் முன்னேற்றப் பாதையில் தனது முத்திரையை உறுதியாகப் பதித்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x