Published : 31 Jan 2019 11:35 AM
Last Updated : 31 Jan 2019 11:35 AM
அசாம் கிளர்ச்சியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்கள் மகன்கள், கணவர்கள் அல்லது மகள்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கவுரவ விருதினை திருப்பித் தர முடிவு செய்துள்ளனர்.
அசாம் கிளர்ச்சியில் குடும்ப உறுப்பினர்களை இழந்த மக்களின் அமைப்பான, 'ஸ்வாஹித் பரியல் சாம்நாய்ரகி பரிஷத் இதுகுறித்து தெரிவித்ததாவது:
''சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அரசுக்கே திருப்பித் தர முடிவு செய்துள்ளோம். இச்சட்டத்திற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
குடிமக்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டால், இம்மாநிலத்துக்காக மகன்களும், மகள்களும் செய்த தியாகங்கள் அர்த்தமற்றதாகிவிடும். காம்ரப் மெட்ரோ நகர துணை ஆணையர் மூலம் அசாம் அரசுக்கு இந்த நினைவுச் சின்னங்களை நாங்கள் மீண்டும் தருவோம்'' என்று 'ஸ்வாஹித் பரியல் சாம்நாய்ரகி பரிஷத் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிசம்பர் 10, 2016 அன்று கவுகாத்தியிலுள்ள கானாபாரா கால்நடை மைதானத்தில் தற்போதைய அரசாங்கத்தால் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் விருதும் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT