Last Updated : 23 Jan, 2019 07:18 PM

 

Published : 23 Jan 2019 07:18 PM
Last Updated : 23 Jan 2019 07:18 PM

ராகுலின் தோல்வியால் காங்கிரஸில் பிரியங்கா –பாஜக கடும் கிண்டல்

ராகுல் காந்தியின் தோல்வியால் காங்கிரஸில் பிரியங்கா வத்ரா களம் இறக்கப்பட்டிருப்பதாக பாஜகவினர் கிண்டல் செய்துள்ளனர். பிரியங்காவின் அரசியல் நுழைவு குறித்து பல்வேறு பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

ராகுல் இளைய சகோதரியான பிரியங்கா வத்ரா(47), முதன்முறையாக காங்கிரஸின் பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கு உபியின் கிழக்கு பகுதி பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

 

வரும் மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், பிரியங்காவின் அரசியல் நுழைவு பாஜகவிற்கு ஒரு சவாலாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று கருத்து கூறி இருந்தார்.

 

இதற்கு பதில் தரும் வகையில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சம்பித் பாத்ரா கூறும்போது, ‘இது பாஜகவிற்கு சவால் அல்ல. இந்த குடும்ப அரசியல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், இது ராகுலின் அரசியல் தோல்வியை காட்டுகிறது. வரும் காலத்தில் ராபர்ட் வத்ராவும் அரசியலில் குதிப்பார். எனினும், காந்திகளால் மட்டுமே அக்கட்சியில் தலைவராக முடியும்.’ எனத் தெரிவித்தார்.

 

பல வருடங்களாக பிரியங்கா தீவிர அரசியல் வருவதாகக் கூறப்பட்டு வந்தது. தற்போது திடீர் என இன்று அவருக்கு காங்கிரஸில் முக்கிய பதவி அளித்து அரசியல் நுழைவு கிடைத்துள்ளது.

 

இது குறித்து பாஜக ஆளும் உபியின் துணை முதல்வரான தினேஷ் சர்மா கூறும்போது, ‘பிரியங்காவின் வரவால் உ.பி மற்றும் இதர மாநிலங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதன்மூலம் தொடரும் குடும்ப அரசியல் அவர்கள் கட்சியினர் இடையே பாதிப்பை ஏற்படுத்தும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தம் ட்விட்டரில் பிரியங்காவிற்கு வாழ்த்து கூறிய மத்திய இணை அமைச்சரான பாபுல் சுப்ரியோ, ‘இந்த மாற்றம் ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல. அரசியலை பற்றி எந்த அறிவும் இல்லாதவருக்கு திடீர் என முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரியங்காவின் அரசியல் வரவு குறித்து சமூகவலைதங்களிலும் பாஜகவினர் கிண்டல் செய்து பதிவு இட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x