Published : 11 Jan 2019 08:14 AM
Last Updated : 11 Jan 2019 08:14 AM
கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மஜத மாநில தலைவர் குமாரசாமி முதல்வராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மஜத நிர்வாகிகள் கூட்டத்தில் குமாரசாமி, "என்னை முதல் வராக்கி விட்டதால் நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பீர் கள். ஆனால் நான் முதல்வரான பிறகு சந்தோஷமாக இல்லை. என்னால் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்" எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
இந்நிலையில் மஜத எம்எல்ஏ-க்கள் கூட்டம் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று முன்தினம்நடைபெற்றது. இதில் குமாரசாமி பேசும்போது, "எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. மஜதவினருக்கு விரும்பிய பதவியை தர முடியவில்லை. காங்கிரஸ் அமைச்சர்களும், அக்கட்சியின் மூத்த தலைவர்களும் என்னை இயக்குகிறார்கள். மக்களவைத் தேர்தல் வரை காங்கிரஸ் தலைவர்கள் என்ன பேசினாலும், அதை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம். மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் நம்முடைய இந்த நிலை மாறும். அதற்காக அனைவரும் அயராது உழைக்க வேண்டும்" என பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT