Published : 08 Jan 2019 09:10 AM
Last Updated : 08 Jan 2019 09:10 AM

10 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்

நாடாளுமன்ற மக்களவையின் காலம் வரும் மே 26-ம் தேதி நிறைவடைகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

வரும் மார்ச் மத்தியில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். ஒன்பது முதல் பத்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படலாம். முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 2-வது வாரத்திலும் கடைசி கட்ட தேர்தல் மே 2-வது வாரத்திலும் நடைபெறலாம். மே மாதத்தின் 3-வது அல்லது 4-வது வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும்.

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை காலம் வரும் நவம்பரில் நிறைவடைகிறது. அந்த மாநிலங்களின் சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டால் அந்த மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படும்.

இவ்வாறு தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x