Published : 05 Jan 2019 08:10 AM
Last Updated : 05 Jan 2019 08:10 AM

மேகேதாட்டு அணையை எதிர்க்கும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள் ளது. இதன் தொடக்க நிலை வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, விரை வில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு நவம்பர் 30-ம் தேதி மேகேதாட்டு திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மேலும் டிசம்பர் 5-ம் தேதி இந்த விவகாரத்தில் கர்நாடக அரசும், மத்திய அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘மேகேதாட்டு விவகாரம் ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதால் தற்போது தடை விதிக்க தேவையில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் வருகிற ஜனவரி 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் 20 பக்க அளவிலான பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘கடலில் வீணாக கலக்கும் நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்து வதற்காகவே மேகேதாட்டு திட்டம் செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி காவிரி நதி நீர் பங்கீடு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு மேகேதாட்டு திட்டத்தை எதிர்ப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

எனவே தொடக்க நிலையி லேயே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளதால் மீண்டும் அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேவையில்லை'' என குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பின்னர், இவ்வழக்கு வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x