Published : 22 Jan 2019 07:50 AM
Last Updated : 22 Jan 2019 07:50 AM

வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின (பிரவஸி பாரதிய திவஸ்) மாநாடு உ.பி. மாநிலம் வாரணாசி யில் இன்று (ஜனவரி 22) தொடங்குகிறது. பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

‘புதிய இந்தியாவை கட்டமைப் பதில் வெளிநாடு வாழ் இந்தியர் களின் பங்கு' என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாக இருக் கும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு, இளைஞர்கள் பிரவஸி மாநாடு வாரணாசியில் நேற்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினத்தில் (ஜனவரி 9) இந்த மாநாடு நடை பெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெறும் கும்பமேளா விலும் குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க இந்த மாநாடு முதல் முறையாக தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x