Last Updated : 19 Jan, 2019 02:59 PM

 

Published : 19 Jan 2019 02:59 PM
Last Updated : 19 Jan 2019 02:59 PM

பாஜக தோல்வியை இந்த மெகா கூட்டணி உறுதி செய்யும்: ஜிக்னேஷ் மேவானி நம்பிக்கை

ஒரே மேடையில் பாஜக எதிர்ப்புக் கட்சிகள் ஒன்றுகூடியிருப்பது ஆர்எஸ்எஸ்., பாஜக தோல்வியை உறுதி செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையொட்டி இப்போதே தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது.

இதில் பேசிய குஜராத் எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி "திரிணமூல் காங்கிரஸ் ஒருங்கிணைத்துள்ள இந்த பிரம்மாண்ட மாநாட்டில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்திருப்பது வரும் மக்களவை தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்ற செய்தியை சொல்கிறது.

இந்த மெகா கூட்டணி நிச்சயமாக ஆர்எஸ்எஸ் பாஜக தோல்வியை உறுதி செய்யும். நம் தேசம் முன் எப்போதும் காணாத அளவுக்கு ஏழைகள், சிறுபான்மையினர், தலித்துகள் துன்புறுத்தப்படும் சூழலை சந்தித்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்தச் சூழல் நிலவுகிறது.

மத்தியில் மெகாகூட்டணி ஆட்சி அமையும்போது, அது அரசியல் சாசனத்தை தூக்கி நிறுத்தும். அப்போதுதான் நம் தேசம் உண்மையாகவே சமூகத்துவம் நிறைந்த குடியரசாக இருக்கும்" எனப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x