Published : 30 Jan 2019 05:50 PM
Last Updated : 30 Jan 2019 05:50 PM

ஓவியங்களை விற்ற விவகாரம்: மோடிக்கு மம்தா சவால்

என்னுடைய ஓவியங்களை விற்று பணத்தை எடுத்துக்கொண்டேன் என்பதை நிரூபிக்க முடியுமா என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் ஓவியங்களை சீட்டுக் கம்பெனி உரிமையாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து வாங்கியதாக பாஜக தலைவர் அமித் ஷா நேற்று (செவ்வாய்க்கிழமை) குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மம்தா, பாஜக தலைவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பிர்புமில் பகுதியில் இன்று  நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ''மோடி, உங்களுக்கு சவால் விடுகிறேன். ஓவியங்களை விற்று அதில் எனக்காக ஒரு பைசா எடுத்துள்ளேன் என்பதை நிரூபியுங்கள். மரியாதை இல்லாமல் காட்டுமிராண்டியைப் போலப் பேசுகிறீர்கள்.

பாஜக தலைவர்களுக்கு சபை நாகரிகமே தெரியாது போல. அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக அவதூறு வழக்கு தொடுக்க உள்ளோம்'' என்றார் மம்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x