Published : 24 Jan 2019 06:00 PM
Last Updated : 24 Jan 2019 06:00 PM

10% இடஒதுக்கீடு; மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1 முதல் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டநிலையில் அது சட்டமாகியுள்ளது. இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புதிய இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபடி மத்திய அரசு பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு ஊழியர்கள் நலத்துறை இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 1-ம் தேதி முதல் பணிகளில் ஆட்சேர்ப்பு நடைபெறும்போது, உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x