

இந்திய விமானப்படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஜிசாட்- 7ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விமானப்படைக்காக பிரத்யேகமாக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்தது. அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
விமானப்படைக்கு தேவையான தகவல்களை பெறுவதற்காகவே இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைகோள், ஜி.எஸ்.எல்.வி- எப்-11 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.