Published : 19 Dec 2018 09:07 AM
Last Updated : 19 Dec 2018 09:07 AM
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரம் மற்றும் அரசியல் துறையில் தனது அனுபவங்களை விவரித்து எழுதியிருக்கும் ‘சேஞ்சிங் இந்தியா’ என்ற புத்தக வரிசை அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியிருக்கிறது. ஐந்து தொகுதிகள் கொண்ட இதை ‘ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ்’ வெளியிட்டுள்ளது. முதல் நான்கு தொகுதிகளுக்கு, ‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்குகளும் தன்னிறைவு கொண்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளும்’, ‘வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றிய சிந்தனைகள்’, ‘சர்வதேச பொருளாதார நிலையும் மேம்பாட்டில் சமத்துவத்துக்கான தேடலும்’, ‘பொருளாதாரச் சீர்திருத்தங்கள்:1991க்குப் பிறகு’ என்று பெயரிட்டிருக்கிறார் சிங். ‘பிரதமர் பேசுகிறார்’ என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட கடைசித் தொகுதியில்தான் பத்தாண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமராகப் பதவிவகித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்தவரான மன்மோகன் சிங்கின் இந்தப் புத்தகம், அரசியல் தலைவர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைச் சரிதமாக அல்லாமல், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் அடைந்துவந்திருக்கும் வரலாறாகவே அமைந்திருக்கிறது என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு வட்டாரம். ஐந்து தொகுதிகளும் சேர்த்து
விலை ரூ.13,995/-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT