Published : 19 Dec 2018 12:04 PM
Last Updated : 19 Dec 2018 12:04 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.  

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இத்தடையை அவ்வப்போது நீட்டித்து வருகிறது. ஜனவரி 15-ம் தேதி வரை கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தர விட்டார்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

இதனை ஏற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் நேரில் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு சிதம்பரம் பதிலளித்தார். பின்னர் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x