ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததால் பரபரப்பு

ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததால் பரபரப்பு
Updated on
1 min read

ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சபரிமலைக்கு வரும் பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலை செல்வதற்காக பம் பைக்கு வந்தனர். இதனால் பம்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திராவைச் சேர்ந்த கிருபா வதி, வினோதினி ஆகியோர் பம்பைக்கு நேற்று காலை வந்த னர். பிற்பகல் நேரத்தில் அவர்கள் மலையேறத் தொடங்கினர். அவர் களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். பெண்களைப் பார்த்தும் ஐயப்ப பக்தர்கள் சிலர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மரக்கூட்டம் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதனால் பக்தர்கள் அதிக அளவில் கூடி போலீஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த 2 பெண்களும் திரும்பிச் சென்றனர். பம்பைக்குச் சென்ற அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பம்பையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாயர் சர்வீஸ் சொசைட்டி

சபரிமலை விவகாரம் தொடர் பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூட்டியுள்ள கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று நாயர் சர்வீஸ் சொசைட்டி (என்எஸ்எஸ்) தலைவர் சுகுமாரன் நாயர் அறிவித் துள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக என்எஸ்எஸ் அமைப்பு பெரும் போராட்டத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தேவசம் போர்டு எதிர்ப்பு

இதனிடையே சபரிமலை பகுதியில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது கெடுபிடி செய்த காவல் மற்றும் வனத்துறையினருக்கு ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற அலுவலகத்துக்கு முன்பாக போடப்பட்டிருந்த தடுப்புகளை நீக்குமாறு டிடிபி அதிகாரிகள் புகார் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பிஸ்கட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in