Published : 26 Dec 2018 10:16 AM
Last Updated : 26 Dec 2018 10:16 AM
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.
டெல்லியில் அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்துக்கு அருகே 1.5 ஏக்கரில் 10.51 கோடி ரூபாய் செலவில் பாஜகவின் சின்னமான தாமரை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. வாஜ்பாயின் 94-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி நினைவிடம் திறக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் வாஜ்பாயின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், ‘‘வாஜ்பாயின் பிறந்த நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம். வாஜ்பாய் கனவு கண்ட வளமான இந்தியாவை உருவாக்குவதில் நம்மை அர்ப்பணிக்க உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT