Published : 30 Dec 2018 12:26 PM
Last Updated : 30 Dec 2018 12:26 PM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தை மகாராஷ்டிராவில் மீட்பு: காவலர்களுக்கு எஸ்.பி.பாராட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட குழந்தையை  மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு பகுதியில் கடத்தல்காரனைப் பிடித்து குழந்தையை மீட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன் தினம் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரசந்தா தனது குடும்பத்தினருடன்  திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள அரசுப் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள மண்டபத்தில் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். காலை 7 மணிக்கு  எழுந்து பார்த்தபோது தனது அருகில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை வீரேஷ் காணாமல் போனதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருமலை இரண்டாவது நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.போலீஸார் குழந்தையின் புகைப்படத்தை வைத்து 6 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் அதிகாலை மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடு ரயில் நிலையத்தில் பதுங்கியிருந்த கடத்தல்காரனை ஆந்திர போலீஸார் பிடித்து குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு திருப்பதி எஸ்.பி. வாழ்த்து தெரிவித்து அங்கிருந்து குழந்தையை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x