Published : 01 Dec 2018 10:12 AM
Last Updated : 01 Dec 2018 10:12 AM
உலகத்துக்கு இந்தியா அளித்த பரிசு யோகா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா தலைநகர் பியோனஸ் அயர்ஸில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். பியோனஸ் அர்ஸ் நகரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று இந்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
சுமார் 24 மணி நேரம் பயணம் செய்து, 15,000 கி.மீ. தொலைவை கடந்து அர்ஜென்டினா வந்துள் ளேன். இந்த நாட்டு மக்கள் காட்டும் அன்பினால் நான் வெளிநாட்டில் இருப்பதாக நினைக்கவில்லை. இந்தியாவில் இருப்பதாகவே உணர்கிறேன்.
இந்தியாவையும் அர்ஜென்டினா வையும் யோகா இணைக்கிறது. உங்கள் உடலையும் மனதையும் யோகாசனம் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மனதில் அமைதி நிலைத்திருந்தால் குடும்பம், சமூகம், நாடு, உலகில் அமைதி தழைத்திருக்கும். உலகின் ஆரோக் கியம், அமைதிக்காக இந்தியா அளித்த பரிசு யோகா. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவின் பெட்ரோலிய தேவையை பூர்த்தி செய்ய சவுதி தயாராக இருப்பதாக இளவரசர் சல்மான் உறுதி அளித்தார். இந்தியா வில் எரிசக்தி, சூரிய சக்தி உள் ளிட்ட துறைகளில் சவுதி அரேபியா முதலீடு செய்ய தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவு செய லாளர் விஜய் கோகலே கூறிய போது, "அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் சவுதியின் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க் கிறோம்" என்று தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது பருவநிலை மாற்றம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT