Published : 25 Dec 2018 10:42 AM
Last Updated : 25 Dec 2018 10:42 AM

ஆந்திரா வளர்ச்சியை தடுக்க தெலங்கானா முதல்வர் முயற்சி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திராவின் போலாவரம் அணை யின் மதகுகள் அமைக்கும் பணியை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத் தார். பின்னர் அவர் கூறியதாவது:

ஆந்திராவில் நடைபெற்று வரும் போலாவரம் அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணி களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தர மறுத்து வருகிறது. எத்தனை தடங்கல்கள் வந்தாலும் இந்த அணை கட்டி முடிக்கப்படும். போலாவரம் அணையின் 62.8 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேலும், ரூ.53,300 கோடி தேவைப் படுகிறது.

ஒடிஷா முதல்வருடன் தெலங் கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் என்ன பேச்சு வார்த்தை நடத்தினாரோ தெரியாது. ஆனால், இந்த அணைக்கட்டு மூலம் தெலங் கானாவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. இதுகுறித்து கூடிய விரைவில் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் பேசப்படும். ஆயினும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏன் இந்த திட்டத்தை எதிர்க்கிறார் என தெரியவில்லை. ஆந்திராவின் வளர்ச்சியை தடுக்க சந்திரசேகர ராவ் முயற்சி் மேற்கொண்டு வருகிறார். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x