Last Updated : 14 Dec, 2018 07:40 AM

 

Published : 14 Dec 2018 07:40 AM
Last Updated : 14 Dec 2018 07:40 AM

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபம்

தெற்கு டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நள்ளிரவு ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவரை (நிர்பயா) 6 பேர் பலாத்காரம் செய்து வெளியில் வீசினர். படுகாயம் அடைந்த அந்தப் பெண் டிசம்பர் 29-ம் தேதி சிங்கப் பூர் மருத்துவமனையில் உயிரிழந் தார். இந்தச் சம்பவம் நாடு முழுவ தும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட ராம் சிங் என்பவர் சிறை யில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக் கில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டது. மீதமுள்ள 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை மறுபரிசீ லனை செய்யக் கோரி தண்டனை வழங்கப்பட்ட முகேஷ் (31), பவன் குப்தா (24), வினய் சர்மா (25) ஆகி யோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மற்றொரு குற்றவாளி அக்�ஷய் குமார் சிங் (33) என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், மேற்கூறிய 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற கோரி, வழக்கறிஞர் அலேக் அலோக் ஸ்ரீவத்சவா என்பவர் உச்ச நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக் கல் செய்தார். அதில், ‘‘தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்டன.

இன்னும் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. எனவே, பலாத்காரம் மற்றும் கொலை குற்றங்களில் ஈடு படுவோருக்கான மரண தண்ட னையை நிறைவேற்றும் காலத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும், நிர்பயா வழக்கில் 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மதன் பி லோக்குர் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறும் போது, ‘‘என்ன மாதிரியான கோரிக்கை இது? இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து நீதிமன் றத்தை கேலிக்குரியதாக ஆக்குகி றீர்கள். இதுபோன்ற மனுவை தாக் கல் செய்யாதீர்கள் இல்லையென் றால் இதுபோன்ற மனுக்களை ஏற்க வேண்டாம் என்று நீதிமன்ற பதி வாளருக்கு உத்தரவிடுவோம்’’ என்று தெரிவித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறும்போது, ‘‘இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை தடையாக உள்ளதா? நாங்கள் டெல்லி முழுவதும் சென்று பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறீர்களா’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x