Published : 12 Dec 2018 08:40 AM
Last Updated : 12 Dec 2018 08:40 AM

மிசோரமில் 5 முறை முதல்வராக இருந்த தன்ஹாவ்லா 2 தொகுதியிலும் தோல்வி

மிசோரமில் காங்கிரஸ் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம், லால் தன்ஹாவ்லா (76) முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன்பின் 2013-ம் ஆண்டு மீண்டும் முதல்வரானார். முன்னதாக அவர் 3 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். மிசோரமில் 5 முறை முதல்வர் பதவி ஏற்றவர் என்ற சாதனையை தன்ஹாவ்லா படைத்தார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில், முதல்வர் தன்ஹாவ்லா  தெற்கு சம்பாய், செர்சிப் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். எனினும் 2 தொகுதிகளிலும் அவர் தோல்வி அடைந்தார். தெற்கு சம்பாய் தொகுதியில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் டிஜே லால்நுன்துலாங்காவிடமும், செர்சிப் தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் முதல்வர் வேட்பாளரான லால்துஹோமாவிடமும் தன்ஹாவ்லா தோல்வி அடைந்தார்.

தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது லால் தன்ஹாவ்லா கூறும்போது, ‘‘காங்கிரஸுக்கு எதிரான அலையால் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக எந்த புகாரும் இல்லை. காங்கிரஸுக்கு எதிரான அலை என்று அவர்கள்தான் (எம்என்எப் கட்சி) கூறுகின்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x