Published : 30 Dec 2018 09:06 AM
Last Updated : 30 Dec 2018 09:06 AM

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: சந்திரபாபு நாயுடு கருத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநில மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். ஆனால் குறைந்து வரும் மக்கள் தொகையால் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறையும்.

எனவே ஆந்திராவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்க பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசு தரப்பில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டவர்கள் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நீக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x